Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

Mahendran
திங்கள், 5 மே 2025 (11:04 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனத்திற்காக வருகை தர இருப்பதால் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஜனாதிபதி திரவுபதி முர்மு  வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், எந்த நாளில் அவர் செல்லப்போகின்றார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
 
சபரிமலை வருகையை முன்னிட்டு, ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்ல, அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு செல்ல, பின்பு பம்பை இருந்து நடைபயணமாக கோவிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சன்னிதானம் மற்றும் தேவசம் விருந்தினர் மாளிகையை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், சபரிமலை வருகைக்கு முன்னர் சாலையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments