Publish Date: Sun, 28 Jan 2024 (17:04 IST)
Updated Date: Sun, 28 Jan 2024 (17:06 IST)
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிதீஷ் குமார் ஒரு வருடம் கூட அந்த கூட்டணியில் இருக்க மாட்டார் என்றும் ஒரே வருடத்தில் அவர் வெளியே வந்து விடுவார் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறிமாறி கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது அரசியல் கூட்டணியே கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பாஜக கூட்டணியில் ஆதரவில் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் அவர் ஒரே ஆண்டில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விடுவார் என பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி நீடிக்காது என்றும் இந்த கூட்டணி உடைந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தேர்தலில் நிதிஷ்குமார் படுதோல்வி அடைவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.