Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ்குமார்.. மக்கள் சுதாரிப்பார்களா?

8 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ்குமார்.. மக்கள் சுதாரிப்பார்களா?

Siva

, ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:38 IST)
கடந்த எட்டு ஆண்டுகளில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்  தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஐந்து முறை கூட்டணி மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அதாவது 2017 ஆம் ஆண்டு அவர் கூட்டணி கட்சியை முடித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார். 
 
இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைவான இடங்களில் வென்றாலும் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார் 
 
ஆனால் 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
 
தற்போது மீண்டும் ஆர்.ஜேகே கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக உடன் மீண்டும் முதலமைச்சர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  
 
கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து முறை மாறி மாறி கூட்டணி அமைத்துள்ள நிதீஷ் குமாரை இனியும் முதலமைச்சர் ஆக மக்கள் தேர்வு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடார் மகாஜன சங்கத்தின் 72 ஆவது ஆண்டு விழா.. அண்ணாமலை வாழ்த்து