Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபாட்டில்களை ஜேசிபியால் அழிக்க முயன்ற போலீசார்: முந்தியடித்து தூக்கிச் சென்ற மதுபிரியர்கள்..!

மதுபாட்டில்களை ஜேசிபியால் அழிக்க முயன்ற போலீசார்:  முந்தியடித்து தூக்கிச் சென்ற மதுபிரியர்கள்..!

Mahendran

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:48 IST)
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க முயற்சித்தபோது அங்கிருந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த மது பாட்டில்களை எடுக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் வாகன சோதனையின் போது உரிமையின்றி கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க போலீசார் திட்டமிட்டனர்.
 
இந்த நிலையில் மது பாட்டில்களை வரிசையாக அடுக்கி ஜேசிபி எந்திரத்தை அதன் மேல் ஏற்ற இருந்த நிலையில் திடீரென அங்கிருந்த பொதுமக்களில் சிலர் மது பாட்டில்களை தூக்கிச் சென்றதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனை அடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மது பாட்டில்களை எடுக்க முயன்ற மதுப்பிரியர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீது இருந்த மது பாட்டில்கள் மட்டும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!!