Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கோட்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு போலீசார் அபராதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

’கோட்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு போலீசார் அபராதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Mahendran

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (12:50 IST)
சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ’கோட்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு போலீசார் அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த படம் வசூல் அளவில் நிச்சயம் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே அரசின் தரப்பிலிருந்து கெடுபிடிகள் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பாக தியேட்டர்களில் பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் ’கோட்’ படம் பார்க்க வந்த ரசிகர்கள் வாகனங்களை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதை அடுத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது

வெற்றி தியேட்டரில் படம் பார்க்க வரும்போதெல்லாம் இங்கேதான் வாகனங்களை நிறுத்துவோம் என்றும் ஆனால் விஜய் படம் பார்க்க வந்த போது மட்டும் போலீசார் அபராதம் விதித்து உள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் 'கோட்’ வெளியாகும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு! என்ன காரணம்?