Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொலை.! பெண் கைது - திடுக்கிடும் வாக்குமூலம்.!!

Murder

Senthil Velan

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:07 IST)
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் ரம்யா தம்பதியரின் 3 வயது ஆண் குழந்தை சஞ்சய் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும்  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் எதிர்வீட்டினை சேர்ந்த தங்கம்மாள் என்ற பெண் முன் விரோதம் காரணமாக சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் போட்டு வைத்தது தெரியவந்தது.
 
தனது மகன் விபத்தில் இறந்ததற்கு சிறுவன் வீட்டினர் செய்வினை வைத்ததே காரணம் என நினைத்து கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். தங்கம்மாளின் மகன் அண்மையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அதற்கு பழிவாங்க இதனை செய்துள்ளார். போலீசார் அந்த பெண்மணியை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக மூன்று வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற சரக்கு ரயில் எஞ்சின்! என்ன காரணம்?