Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் மிகப்பெரிய 2வது அணை:

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் மிகப்பெரிய 2வது அணை:
, வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (05:02 IST)
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 2வது அணை என்ற பெருமையை பெற்றுள்ள  சர்தார் சரோவர் அணையை வரும் நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.



 
 
கடந்த 1961ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த அணை தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மக்களின் இழப்பீடுகள் வழங்கப்படாததால் இந்த அணையின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த அணை திறக்கப்படும் நாள் தான் பிரதமர் மோடியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒண்ணு நான் இருக்கணும், இல்லையெனில் ஊழல் இருக்கணும்: கமல்ஹாசன்