Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சமயத்துலதான் நாம ரொம்பா ஜாக்கிரதையா இருக்கணும்! – பிரதமர் மோடி!

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (14:51 IST)
ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அளித்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் என பிரதர் மோடி கெட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கை மாநில அரசுகளே பாதிப்பின் தீவிரம் உணர்ந்து மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார்.

அப்போது அவர் “கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒற்றுமையோடு போராடி வருகின்றனர். தற்போது தளர்வுகள் மெல்ல மெல்ல அளித்து வரும் நிலையில் மக்கள் இந்த சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனாவை எதிர்த்து இந்தியா வெற்றி பெற காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது, வெட்டுக்கிளி தாக்கத்திலிருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments