Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டிய பாதிப்புகள் – மாநிலவாரி நிலவரம்

1 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டிய பாதிப்புகள் – மாநிலவாரி நிலவரம்
, ஞாயிறு, 31 மே 2020 (10:00 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடம் முடியும் நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,164 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 86,894 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65,168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,197 பேர் பலியான நிலையில் 28,081 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 27,184 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 16,343 பேரும், டெல்லியில் 18,549 பேரும், ராஜஸ்தானில் 8,617 பேரும், மத்திய பிரதேசத்தில் 7,891 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,445 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழகம்! – போக்குவரத்து நடைமுறைகள் என்ன?