Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி!

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி!
, திங்கள், 29 நவம்பர் 2021 (10:43 IST)
நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது முதலாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி “நடைபெற உள்ள கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார். எதிர்கட்சிகளின் கேள்விக்கு உரிய பதில் அளிக்க தயாராக உள்ளேன். அனைவரும் அமைதியான முறையில் கூட்டத்தொடர் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!