Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய வகை கொரோனா- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மோடி ஆலோசனை

புதிய வகை கொரோனா- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மோடி ஆலோசனை
, சனி, 27 நவம்பர் 2021 (11:33 IST)
புதிய வகை கொரோனா வைரஸால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை. 
 
தென்னாப்பிரிக்கா ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் புதிய வகை வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளிலேயே மிகவும் வீரியமானது என்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான வைரஸ் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய வகை வைரஸ் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவர்களை கூட தாக்கலாம் என்றும் அதனால் பூஸ்டர் டோஸ் போடுவதை வேகப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதனால் ஆப்ரிக்க நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச சந்தையில் Redmi Note 11 அறிமுகம்: விவரம் உள்ளே!!