மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவார் தொடர்புடையதாக கூறப்படும் ரூ.1,800 கோடி மதிப்பிலான நில மோசடி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, புனேவின் முண்ட்வா பகுதியில் உள்ள 43 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம், பார்த் பவாருடன் இணைக்கப்பட்ட அமீடியா என்டர்பிரைசஸ் எல்.எல்.பி நிறுவனத்திற்கு வெறும் ரூ.300 கோடிக்கு விற்கப்பட்டதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இதில் மிகப்பெரிய விதிமீறல், ரூ.300 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திற்குச் சுமார் ரூ.21 கோடி முத்திரை தீர்வை செலுத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அது வெறும் ரூ.500 பெயரளவு கட்டணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில கருவூலத்திற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி பதிவு செய்த இணை சார்-பதிவாளர் ரவீந்திர தாரு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிலுவையில் உள்ள ரூ.5.99 கோடி முத்திரைத் தீர்வையை வசூலிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து 8 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.