Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. ஒன்று தான் வெடித்தது.. மத்ததெல்லாம் நடுவானில் புஸ்..!

Advertiesment
பாகிஸ்தான்

Siva

, வெள்ளி, 9 மே 2025 (18:06 IST)
இந்தியா மீது நேற்று இரவு பாகிஸ்தான் 500 சிறிய வகை ட்ரோன்களை ஏவியதாகவும் அவற்றில் 499 ட்ரோன்கள் நடு வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஒரே ஒரு ட்ரோன் மற்றும் ஜம்முவில் உள்ள விமான நிலையம் அருகில் வெடித்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் கூட யாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக தாக்கப் போகிறேன் என்று கூறிய பாகிஸ்தான் நேற்றிரவு சிறிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. ஆனால் இந்தியாவிடம் இருக்கும் சுதர்சன சக்கரம் என்ற ஆயுதம் அவற்றை ஒன்றை கூட இந்தியா பக்கமே வர விடவில்லை. நடு வானிலையை வழிபறித்து அத்தனையையும் அழித்தது.
 
அனைத்துமே கிட்டத்தட்ட புஸ்வானம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானிடம் இருக்கும் ஆயுதங்கள் எதுவும் நவீனமானவை இல்லை என்றும், ஆனால் இந்தியாவிடம் லேட்டஸ்ட் ஆயுதங்கள் இருப்பதால் இந்தியாவுடன் போர் செய்யும் தகுதி கூட பாகிஸ்தானுக்கு இல்லை என்பது இந்த நிகழ்வு நிரூபிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபிசி உருது எக்ஸ் பக்கம் முடக்கம்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..!