Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:56 IST)
வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், சில்லறை விற்பனையில் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சேமிப்பு கிடங்குகளில் கையிருப்பாக உள்ள வெங்காயத்தை சந்தையில் விநியோகம் செய்து, விலை உயர்வை கட்டுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சேமிப்பு கிடங்குகளில் உள்ள வெங்காயத்தை டெல்லி உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் விநியோகம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதேபோல், தக்காளி விலையும் உயர்ந்தால், வெங்காயத்தைப் போலவே, மத்திய அரசு அதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, வெங்காயத்தின் விலை கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தந்தால்..? நேதன்யாகு எச்சரிக்கை! படைகளை அனுப்பிய அமெரிக்கா!

இந்தியாவில் முதல்முறையாக 1-பி வகை குரங்கம்மை! கேரள நபர் மருத்துவமனையில் அனுமதி!

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments