Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:49 IST)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் 14 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் சமீபத்தில் ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கொலை தொடர்பான வழக்குகள் உள்ளன என்றும், இந்த வழக்கில் அவரை ஏன் கைது செய்யவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும், எனவே அவரை கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில்தான் தன்னை பற்றி பொய்யான தகவலை பரப்பியதாக ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
மேலும்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதோடு, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், அவர் 14 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 10 கோடி ரூபாய் மதிப்பில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தந்தால்..? நேதன்யாகு எச்சரிக்கை! படைகளை அனுப்பிய அமெரிக்கா!

இந்தியாவில் முதல்முறையாக 1-பி வகை குரங்கம்மை! கேரள நபர் மருத்துவமனையில் அனுமதி!

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments