Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக் மோசடி வழக்கு: முன்னாள் முதல்வர் மகனுக்கு 6 மாதம் சிறை

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:40 IST)
ஆந்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகன் நந்தமுரி ஜெயகிருஷ்ணாவுக்கு ஐதராபாத் நீதிமன்றம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
என்.டி.ராமராவ் அவர்களின் எட்டு மகன்களில் ஒருவரான நந்தமுரி ஜெயகிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா திரையரங்கத்தின் பார்க்கிங் மற்றும் கேண்டின் லீஸ் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த செக் ஒன்று போதிய பணமில்லாமல் திரும்பிவிட்டது.
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜெயகிருஷ்ணாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயகிருஷ்ணாவின் மைத்துனர் தான் தற்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு ரெட்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments