Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசு பாதுகாவலர்களுக்கு கடிவாளமிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

பசு பாதுகாவலர்களுக்கு கடிவாளமிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
, புதன், 6 செப்டம்பர் 2017 (16:29 IST)
பசு பாதுகாவலர்களுக்கு கடிவாளமிட அதிகாரிகளை நியமனம் செய்ய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
நாடு முழுவதும் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை அடுத்து பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாநிலம் தோறும் ஒரு குழுவாக வன்முறையில் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
 
மோடியும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் கும்பல் தாக்குதலை ஏற்க முடியாது என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க நாடு முழுவதும் சிறப்பு அதிகாரிகளை கண்காணிக்க நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், பசு பாதுகாவலர்களால் கால்நடைகள் ஏற்றிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது - வேலூர் சி.எம்.சி. அதிரடி