கருப்பு தினம், கருப்புப்பண ஒழிப்பு தினம்: நவம்பர் 8 படும் பாடு

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (08:56 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான நடுத்தர, ஏழை எளிய மக்கள் திண்டாடினர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன



 
 
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுத்து ஒருவருடம் முடிவடைய உள்ளது. இந்த தினத்தை அதாவது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள்  நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கும் என்று அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவம்பர் 8-ம் தேதியை தேசிய கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. ஒரே நாளில் கருப்பு தினம், மற்றும் கருப்புப்பண ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் வரும் நவம்பர் 8 பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments