Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: சல்மான்கானின் திடீர் முடிவு ஏன்?

எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: சல்மான்கானின் திடீர் முடிவு ஏன்?
, வெள்ளி, 22 மார்ச் 2019 (08:27 IST)
வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யும் திட்டம் இல்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டரில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தூர் நகர மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் சங்கவி ஆதரவாக சல்மான்கான் பிரசாரம் செய்தார். ஆனால், அவரது பிரச்சாரம் எடுபடவில்லை. அந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த கிருஷ்ணா முராரே மோகே வெற்றிபெற்று மேயரானார். இதனால் சல்மான்கான் அதிருப்தி அடைந்தார்.

webdunia
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநில இந்தூர் தொகுதியில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான் கான் பிரசாரம் செய்வார் என்று மத்தியபிரதேசம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ள நடிகர் சல்மான்கான் இந்த தேர்தலில் நான் எந்த கட்சி சார்பில் போட்டியிடப் போவதில்லை என்றும்,  எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவும் மாட்டேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்?