Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு சக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள்..

Arun Prasath
வியாழன், 20 பிப்ரவரி 2020 (18:45 IST)
வருகிற அக்டோபர் முதல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான புதிய விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளது. அதன் படி மோட்டார் வாகன சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த விதியின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. மேலும் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு ஃபுட் ரெஸ்ட் இருப்பது அவசியமாகிறது. அதே போல் பின் சக்கரத்தை பாதியாக மறைக்கும் வரை மட் கார்ட் பொருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டி கைப்பிடி அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மீது சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments