Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஊரையெல்லாம் விட்டுவிட்டார்கள்! – சுட்டிக்காட்டும் ஸ்டாலின்!

இந்த ஊரையெல்லாம் விட்டுவிட்டார்கள்! – சுட்டிக்காட்டும் ஸ்டாலின்!
, வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:51 IST)
தமிழக அரசின் வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவில் சில மாவட்டங்கள், ஊர்களை சேர்க்காதது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகைசெய்யும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பல வகையான தொழிற்சாலைகள் மற்றும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களும் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதா குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், இந்த பட்டியலில் திருச்சி, கரூர் மற்றும் அரியலூர் ஆகியவை சேர்க்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்பது போல ஸ்டாலினின் பேச்சு உள்ளது என ஆளுங்கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறதாம்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா எதிரொலி: சொகுசு கப்பலில் மரணங்கள்!!