Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்ட தேதிகளில் தேர்வு நடைபெறும்! – தேசிய தேர்வு முகமை!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:23 IST)
கொரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென பலர் கூறி வரும் நிலையில் திட்டமிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் ஐஐடி போன்றவற்றிற்கான ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன.

இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சகஜநிலை ஏற்படாத நிலையில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும், நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி நுழைவு தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

71 நாடுகளில் கூகுள் அறிமுகம் செய்த AI வீடியோ உருவாக்கும் மாடல்.. இந்தியாவில் மட்டும் இல்லாதது ஏன்?

இந்தியர்கள் இனி இந்தியாவுக்குள்ளேயே சுற்றுலா செல்வார்கள்.. துருக்கி குறித்து மறைமுகமாக கூறிய மோடி..!

ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டை ஒட்டி நூதன திருட்டு.. 3 வட மாநில இளைஞர்கள் கைது..!

நேற்று முளைத்த காளான் விஜய்.. களத்துக்கு வாங்க வெச்சு செய்றோம்! - அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது: மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments