Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்சி பிரமுகரை மாலை போடுவதுபோன்று வெட்டிய மர்ம நபர்!

andra
, வியாழன், 17 நவம்பர் 2022 (16:42 IST)
ஆந்திரபிரதேச மாநிலம் காக்கி நாடாவில், தெலுங்கு தேச கட்சி பிரமுகரை ஒருவர் அரிவாளால் வெட்டித் தப்பிச்சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா  நிலத்தில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள காக்கி நாடா என்ற பகுதியில், தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரை இன்று நேரில் சந்திக்கச் சென்ற மர்ம நபர் ஒருவர், அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு மாலை போடுவதுபோன்று தன் பின்னால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொண்டு அவரை வெட்ட முயன்றார்.

இதில், கீழே சரிந்து விழுந்தார் பிரமுகர். இதையடுத்து, அந்தப் பிரமுகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலையில் மூன்று வேளை அன்னதானம்! – என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?