Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Advertiesment
Yogi Adithyanath

Prasanth Karthick

, செவ்வாய், 11 மார்ச் 2025 (09:11 IST)

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அன்று முஸ்லீம்கள் வெளியே வர வேண்டாம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் வடமாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் ஹோலி வரும் நிலையில் அதே நாளில் இஸ்லாமியர்களும் தொழுகைக்கு செல்வார்கள் என்பதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழாமல் இருக்க இஸ்லாமியர்கள் அன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சம்பல் மாவட்ட காவல்துறை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

அதை ஆதரித்து பேசியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்கள் ஆண்டின் 52 வெள்ளிக்கிழமையும் தொழுகை செய்கிறார்கள். ஆனால் ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதனால் இஸ்லாமியர்கள் அன்று தொழுகை செய்ய மசூதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஹோலி வண்ணங்களை அசௌகரியமாக நினைப்பவர்கள் வீட்டிலேயே இருந்து விடுங்கள்” என பேசியுள்ளார்

 

ஏற்கனவே கும்பமேளா சமயத்தில் யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியிருந்த நிலையில், தற்போது ஹோலி கொண்டாடும் நேரத்தில் அவர்களை வீடுகளில் இருக்க சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!