கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
திங்கள், 20 அக்டோபர் 2025 (09:53 IST)
மத்திய டெல்லி ராம் நகர் பகுதியில் கள்ளக்காதல் தகராறு காரணமாக நடுவீதியில் இரண்டு பேர் குத்திக் கொல்லப்பட்டனர். 
 
கர்ப்பிணிப் பெண்ணான ஷாலினி என்பவரை அவரது கள்ளக்காதலன் ஆஷு  பொதுமக்கள் கண்முன்னே கத்தியால் குத்திக் கொன்றார்.
 
கள்ளக்காதலில் இருந்து மீண்டு ஷாலினி தனது கணவர் ஆகாஷ்  மீண்டும் வாழ தொடங்கியதால் ஆஷு ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. மேலும், ஷாலினி வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் தந்தை என்று ஆஷு உரிமை கோரியுள்ளார்.
 
நேற்றிரவு ஷாலினியை தாக்கிய ஆஷு, அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஆகாஷும் குத்தப்பட்டார். இருப்பினும், ஆகாஷ் ஆஷுவிடமிருந்து கத்தியை பிடுங்கி, அவரை குத்திக் கொன்றார்.
 
மருத்துவமனையில் ஷாலினியும் ஆஷுவும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். ஷாலினியின் கணவர் ஆகாஷ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஷாலினியின் தாயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
Edietd by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments