Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரரை அடித்து கொன்ற மர்ம கும்பல் – மும்பையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (19:20 IST)
மும்பையில் 35 வயது கிரிக்கெட் வீரர் ராகேஷ் பவாரை மர்ம கும்பல் ஒன்று அடித்து கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர். ராகேஷ் பவார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மும்பை பகுதியில் பிரபல கிரிக்கெட் ப்ளேயராக அறியப்படும் இவர் அங்குள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் கற்றுதரும் பயிற்சி மையமும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் அவருடைய தோழி ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார் ராகேஷ். அப்போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவர்கள் வாகனத்தை வழிமறித்தது. இதை சற்றும் எதிர்பாராத ராகேஷை அவர்கள் சிறிய ரக கோடாரியாலும், இரும்பு கம்பிகளாலும் சராமாரியாக தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ராகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரது தோழி போலீஸாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் வந்த வேலையை முடித்துவிட்டு மூவர் கும்பல் தப்பியோடிவிட்டது. ராகேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். மேலும் இது ஏதாவது பழிவாங்கல் முயற்சியா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments