Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் நிபா வைரஸ் உஷார் நிலை பிறப்பிப்பு

கர்நாடகாவில் நிபா வைரஸ் உஷார் நிலை பிறப்பிப்பு
, வியாழன், 6 ஜூன் 2019 (16:35 IST)
கர்நாடகாவில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் பரவியது. இந்த நோய்க்கான சிகிச்சையை அளிப்பதற்கு  முன்பு 17 பேர் பலியாகினர். இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் பலியானார். இச்சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது.
 
இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ‘நிபா’  வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.  இதனால் எல்லை பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தையும் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.
webdunia
இதேபோல், கர்நாடக மாநிலத்திலும்  தீவிர கண்காணிப்பு  நடைபெறுகிறது. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள் உள்பட 8  மாவட்டங்களில்  உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள்  அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிகளின் ஆபாச வீடியோ விவகாரம் : குற்றவாளிகள் கைது .. திடுக் தகவல்