Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

Siva
வெள்ளி, 23 மே 2025 (17:24 IST)
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான  முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி, மீண்டும் செய்தியில் இடம்பிடித்துள்ளனர். காரணம்  முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள “ஆபரேஷன் சிந்தூர்” குறித்த பாராட்டு செய்தி தான்.
 
‘ரைசிங் நார்த் ஈஸ்ட் இன்பெஸ்டர்ஸ் சம்மிட் 2025’ நிகழ்வில் பேசிய அவர், “ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன். இது அவரது உறுதியான முடிவு மற்றும் இந்திய ராணுவத்தின் வியப்பூட்டும் வீரவணக்கத்திற்கான சான்றாகும்,” என்றார்.
 
மேலும் அவர் கூறியதாவது: “இந்திய ராணுவத்தின் வீரத்தை பெருமிதத்துடன் பாராட்டுகிறோம். துரோகர அரசியல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நின்று வருகிறது. பிரதமர் மோடியின் தைரியமான தலைமையின் கீழ், எல்லை கடந்த அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் துல்லியமான, வலுவான பதிலடி கொடுத்துள்ளது.”
 
ஆபரேஷன் சிந்தூர்: மே 7ம் தேதி நடந்த இந்த நடவடிக்கையில், ஏப்ரல் 22ல் பஹல்‌காம் பகுதியில் 26 நபர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்க, பாகிஸ்தானின் உள்பகுதியில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன.
 
இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் எழுந்து வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments