இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு! மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:05 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அளவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களை எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 
 
கடந்த வாரம் தினமும் 1500 பேர்கள் வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் 2000, 3000, 4000 என உயர்ந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 25,587 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாட்டுகள் விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments