Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் கேரள மக்கள்

முதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் கேரள மக்கள்
, புதன், 7 அக்டோபர் 2020 (19:38 IST)
தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அம்மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக உள்ளது. கேரளாவில் இன்று மட்டும் 10,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதனையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் 92,161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது 
 
மேலும் கேரளாவில் இதுவரை 160,253 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் இடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்: பரபரப்பு தகவல்