Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து! தமிழர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி!

Prasanth Karthick
புதன், 30 ஏப்ரல் 2025 (09:23 IST)

கொல்கத்தாவின் மத்தியப் பகுதியான பால்பட்டி மச்சுவாவில் தங்கும் ஓட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக ஓட்டலை விட்டு வெளியேறினர். 4வது மாடியில் தங்கியிருந்த பலரும் பக்கவாட்டு ஏணிகளின் மூலம் இறங்கும்போது சிலர் விழுந்து காயமடைந்துள்ளனர்.

 

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டபோது தீயில் கருகி பலியான 14 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும், அவரது பேரன், பேத்தியும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments