Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாணத்துக்கு வந்த காதலன்; மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!

கல்யாணத்துக்கு வந்த காதலன்; மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!
, திங்கள், 2 மார்ச் 2020 (13:06 IST)
தெலுங்கானாவில் மணமகள் ஒருவர் தனது திருமணத்தை தானே நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் சார்லபள்ளி என்ற கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக திருமணத்திற்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. திருமண நாள் அன்று அனைத்தும் ஏற்பாடாகி மணமகன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட போகும்போது திடீரென அந்த பெண் மணவறையிலிருந்து எழுந்து சென்றிருக்கிறார்.

இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம் பேச அவரோ அனைவர் முன்னிலையிலும் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். உறவினர்கள் பலர் வற்புறுத்தியும் அவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

அந்த பெண்ணின் திருமணத்திற்கு அவரது காதலன் வந்ததாக கூறப்படுகிறது. காதலனை பார்த்ததும் மனம் மாறிய அந்த பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்திவிட்டதாக அங்குள்ளவர்கள் பேசியுள்ளனர். மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார் ஜெயகுமார்: பரபரப்பு தகவல்