Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிப்பு.. ஏப்.18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!!

Manish Sisodiya

Senthil Velan

, சனி, 6 ஏப்ரல் 2024 (14:59 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 18ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநிலத் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்
 
இதையடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையின் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 
இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சபட்ச ராணுவப் பாதுகாப்பு தயார் நிலையில் இஸ்ரேல்!