Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து உறங்கிய நபர். நடு வழியில் நிறுத்தப்பட்ட ரயில்..!

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து உறங்கிய நபர். நடு வழியில் நிறுத்தப்பட்ட ரயில்..!

Siva

, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (15:43 IST)
ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரால் அந்த வழியாக சென்ற ரயில் காலதாமதமாக சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிஸியான ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் குடையுடன் படுத்து தூங்கியதாக தெரிகிறது/ இந்த நிலையில் ரயில் லோகோ பைலட் தூரத்திலிருந்த போதே யாரோ ஒருவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்ததும் சுதாரித்து ரயிலை நிறுத்தினார்.

அதன் பிறகு அவர் இறங்கி வந்து தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பினார். நீண்ட நேரம் கழித்து தான் அந்த நபரை எழுப்ப முடிந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக குடையுடன் தூங்கிய நபர் லோகோ பைலட் எழுப்பியதை அடுத்து எழுந்து அவர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர் மனநல குறைபாடு உள்ளவர்  என்று அந்த பகுதி மக்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா, வங்கதேசம் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமான திரிபுராவின் தம்பூர் அணை