Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் இருந்து என்ன செய்ய? கர்ப்பமான மனைவிக்காக ரூ.1.2 கோடி சம்பள வேலையை உதறிய நபர்!

Siva
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (17:31 IST)
பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞர், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு ரூ.1.2 கோடி வருமானம் ஈட்டி தரும் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 
அந்த இளைஞர் தனது சமூக வலைதளப் பதிவில், "வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களில் உடனிருப்பது மிகவும் அவசியம். இதுபோன்று அழகிய தருணங்களை அனுபவிக்காமல், அதிக வருமானம் ஈட்டி என்ன செய்யப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
"பணம் மட்டுமே இருந்தால் போதுமா? என் மனைவிக்கு இந்த நேரத்தில் நான் உடனிருந்து ஆதரவு அளிக்க வேண்டும்" என்றும் அவர் தனது முடிவுக்கு காரணம் கூறியுள்ளார்.
 
கர்ப்ப காலத்தில் ஒரு மனைவிக்கு கணவரின் உடனிருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, அதிக சம்பளத்தைக்கூட பொருட்படுத்தாமல் வேலையை விட்ட அந்த இளைஞரின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments