Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் நபருக்கு கண்களுக்கு கீழ் வளரும் பல்.. மருத்துவ துறையில் மிக அரிது.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (17:01 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு, கண்களுக்கு கீழே உள்ள எலும்பில் பல் வளர்ந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவிக்குமார் என்ற அந்த நபர், முகம் வீங்கிய நிலையிலும், கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ரவிக்குமாருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின்போது, அவரது கண்களுக்கு கீழே உள்ள எலும்பில் ஒரு பல் வளர்ந்திருப்பதை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர். இத்தகைய நிலை மருத்துவத்துறையில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சிக்கலானதாகவும், பார்வைக்கு அச்சுறுத்தலாகவும் இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
 
பல மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் வெற்றிகரமாக அந்த பல்லை அகற்றினர். தற்போது ரவிக்குமார் நலமுடன் இருப்பதாகவும், அவரது பார்வை படிப்படியாக தெளிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அரிய மருத்துவ நிகழ்வு, உள்ளூர் மருத்துவர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments