Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

Advertiesment
மதுரை

Mahendran

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:55 IST)
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், உடல்நல குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டதால், ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மாநகராட்சி அதிகாரிகளின் கடவுச்சொற்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
 
இதுதொடர்பாக, சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட பொன் வசந்தை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் காவல்துறையினர் மதுரைக்கு அழைத்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருக்கு அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!