Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல.. துறவியாக மாறிய பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை..!

Advertiesment
மம்தா குல்கர்னி

Siva

, வெள்ளி, 31 அக்டோபர் 2025 (18:03 IST)
மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து பாலிவுட் நடிகையாக இருந்து துறவியாக மாறிய மம்தா குல்கர்னி பேசியதாக எழுந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச நிகழ்ச்சியில் பேசிய அவர், "தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல, அவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பில்லை" என்றும், "விக்கி கோஸ்வாமி எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை" என்றும் பேசியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
 
இதையடுத்து மம்தா குல்கர்னி விளக்கமளித்துள்ளார். அதில், "நான் தாவூத் இப்ராஹிம் குறித்து பேசவில்லை, எனது முன்னாள் பார்ட்னர் விக்கி கோஸ்வாமி பற்றி மட்டுமே பேசினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் விக்கி கோஸ்வாமி கைது செய்யப்பட்ட பிறகு, செய்வதறியாமல் மம்தா குல்கர்னி இந்தியா திரும்பி ஆன்மீகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம் என்ன ஆச்சு? முக்கிய உத்தரவு..!