Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவில் சிறுநீரை கழித்து ரொட்டி செய்த பணிப்பெண்! குடும்பமே மருத்துவமனையில் அனுமதி!

Prasanth Karthick
புதன், 16 அக்டோபர் 2024 (17:53 IST)

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணிபுரியும் பெண் அந்த வீட்டாருக்கு சமையலில் சிறுநீரை கலந்து சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ரீனா என்ற பெண் சமையல் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ரீனா சமைத்து தந்த ரொட்டியை அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில் வாந்தி, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உணவு ஒவ்வாமை குறித்து சந்தேகம் எழுந்த அந்த குடும்பத்தினர் வீட்டில் உள்ள கேமராவை சோதனை செய்தபோது, அதில் பணிப்பெண் ரீனா ரொட்டி தயாரிக்கும் மாவில் தண்ணீருக்கு பதிலாக தனது சிறுநீரை கலந்து ரொட்டி தயாரிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து உடனடியாக அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments