போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

Mahendran
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (17:26 IST)
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்ட ஊர்வலத்தில் ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா திடீரென மயங்கி விழுந்தபோது அவரை கைத்தாங்கலாக ராகுல் காந்தி பிடித்து கொண்டார்.
 
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தின் மகர துவாரில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எம்.பி.க்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, "வாக்கு திருடன்" என்று முழக்கமிட்டு, 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் "வாக்குத் திருட்டை" கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர். 
 
இந்த போராட்டத்தின்போது மகுவா மொய்த்ரா எம்பி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. அப்போது ராகுல் காந்தி மற்றும் சாகரிகா கோஸ் ஆகிய இருவரும் அவர் மயங்கி கீழே விழாதவகையில் கைத்தாங்கலாக பிடித்து கொண்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments