Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

Siva
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (16:44 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை பனையூரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, கடந்த 11 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.
 
சமீபத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்த நிலையில், தற்போது தூய்மைப் பணியாளர்களின் நிர்வாகிகளும் அவரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு போராட்ட குழுக்களின் ஆதரவை பெறுவதற்காக விஜய் இந்த சந்திப்புகளை மேற்கொள்வதாக தெரிகிறது.
 
இந்த சந்திப்புகளின் மூலம், தமிழக வெற்றிக் கழகம் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக தன்னை முன்னிறுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments