Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

Advertiesment
INDIA bloc

Siva

, ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (15:23 IST)
வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை  டெல்லியில் பேரணி நடத்தவுள்ளனர்.
 
2024 மக்களவைத் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம் ஆகும்.
 
இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி செல்லும்.
 
பேரணி முடிந்த பிறகு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களுக்கு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் இரவு விருந்து அளிக்கவுள்ளார். இது, கூட்டணித் தலைவர்களை ஒன்றிணைக்கும் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!