Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (14:32 IST)
அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம் என மகாராஷ்டிரா மாநிலம் புது திட்டம் ஒன்றை கிராம பகுதியில் கொண்டு வந்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது நான்கு கிராம பஞ்சாயத்துகளில் இந்த பிரச்சனைக்கு புதிய திட்டம் இயற்றப்பட்டுள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள பட்காவ், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகாலி, பாலேகுல், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவாலே ஆகிய கிராமங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்தால் அந்த பெற்றோரின் சொத்துக்களுக்கான சொத்து வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்பத்தில் இந்த திட்டத்தை பஞ்சாயத்து அளவில் தொடங்கி, அதன்பின் நகராட்சி, மாநகராட்சி என மாநில முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments