Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்சத்தில் கொரோனா... தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி !

உச்சத்தில் கொரோனா... தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி !
, வெள்ளி, 19 மார்ச் 2021 (16:36 IST)
மகாராஷ்டிராவில் அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மிகவும் அதிகமாகி வருகிறது என்பதும் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கி இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நாக்பூர், புனே ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில நேரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று செய்திகள் வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுக்கேட்டு உள்ளே வராதே… தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!