Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி: படக்குழுவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி: படக்குழுவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
, வெள்ளி, 19 மார்ச் 2021 (13:20 IST)
பிரபல இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய் நடித்து வரும் ’அருண்விஜய் 33’ என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஹரி மற்றும் அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அருண்விஜய் பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று திடீரென இயக்குனர் ஹரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தின் படக்குழுவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட்டில் புகுந்து விளையாடும் அதிதி ராவ் ஹைதாரி!