Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமா பஸ் ஓட்டினா இதுதான் தண்டனை! – டிரைவரை தண்டித்த பொதுமக்கள்

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (12:48 IST)
மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய ஓட்டுனர்களை பொதுமக்கள் நூதனமான முறையில் தண்டித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பேருந்து ஓட்டுனர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிவேகமாக பேருந்துகளை இயக்குவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஓட்டுனர்கள் மக்கள் செல்வதை கவனிப்பதில்லை என்றும், கண்மூடிதனமாக பேருந்துகளை இயக்குவதாகவும் ராவ் நகர மக்கள் நகராட்சி தலைவர் சிவ்நாராயண டிங்குவிடம் அளித்த புகாரையடுத்து அவர் ஒரு நூதனமான தண்டனையை முன்மொழிந்துள்ளார்.

அதன்படி செயல்பட்ட பொதுமக்கள் அதிவேகமாக பேருந்து இயக்கும் ஓட்டுனர்களை பிடித்து பேருந்தின் உச்சியில் நிற்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். ஓட்டுனர்களை பொதுமக்களே தண்டித்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments