Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

Mahendran
திங்கள், 21 ஜூலை 2025 (12:07 IST)
இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டுக்கொண்டிருந்தபோது அதை தான் தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலு இன்று முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அதன்பின், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கின. ஆனால், இந்த நோட்டீஸை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், தற்போது கேள்வி நேரம் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
 
இதனை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அதிமுகவில் நீக்கம்! அறிவாலயத்தில் அன்வர் ராஜா! - அதிமுக மீது கடும் விமர்சனம்!

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments