Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? – சிறை நிர்வாகம் கேள்வி !

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? – சிறை நிர்வாகம் கேள்வி !
, வியாழன், 23 ஜனவரி 2020 (14:32 IST)
நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நெருங்கி வரும் வேளையில் அவர்களின் கடைசி ஆசை என்ன என சிறைத்துறை நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு பேர்களுக்கு நேற்று தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர்கள் நால்வரும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தூக்குத் தண்டனை நாள் உள்ளதால் அதற்கான வேலைகளில் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் குற்றவாளிகளிடம் அவர்களின் கடைசி ஆசை என்ன எனக் கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தண்டனை குறித்து கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலுமினாட்டிகளுடன் தொடர்பு: சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சி!