திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (09:04 IST)
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் குவிந்ததாகவும், இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு அதிகமாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை கொண்டாடிவிட்டு சுற்றுலா பயணம் செய்ய பொதுமக்கள் முன்வந்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் சுற்றுலா பயணிகள் காணப்படுகின்ற நிலையில், திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் நிரம்பி வழிந்துள்ள நிலையில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும் 4 மணி நேரம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் 67,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர், மற்றும் அதே நாளில் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடியே 38 லட்ச ரூபாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments