Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருதலைக் காதல் – ஒத்துக்கொள்ளாத பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:46 IST)
கேரளாவைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞர் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கேரளாவில் பீதியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை இது பற்றி பேசியுள்ளதாகவும் ஆனால் அந்த பெண் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நிதின் அந்த பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டருகே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றிய அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments